Saturday, April 16, 2011

அன்னா ஹஸாரேவின் தரிசனத்திற்கு 600 ரூபாய்

annadarshan295
புதுடெல்லி:ஊழலுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அன்னா ஹஸாரேவின் தரிசனத்திற்காக 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
மக்கள் லோக்பால் மசோதாவிற்காக ஹஸாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சுவாமிஜீகளின் மட்டத்திற்கு ஹஸாரேவின் புகழும் உயர்ந்துள்ளது.
புனேயிலிருந்து 70 கி.மீ தொலைவிலுள்ள ரலேகான் சித்தி என்ற ஹஸாரேவின் முன்மாதிரி கிராமத்தில் வசிக்கும் அவரை சந்திக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனைத் தொடர்ந்து ஹஸாரேவின் தரிசனத்தை வியாபாரமாக மாற்ற திட்டமிட்ட சுற்றுலா நிறுவனம் ஒன்று ரலேகான் சித்தியில் ஹஸாரேவை தரிசிக்க ரூ.600 கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
ஐ.டி. ப்ரொஃபசனல்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் ஆகியோர் ஹஸாரேவை தரிசிப்பவர்களில் அடங்குவர். ஹஸாரேவால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சரத்பவாரின் தொகுதியான பாராமதியிலிருந்து பயணம் துவங்குகிறது. அக்ரோ டூரிஸம் டெவலப்மெண்ட் இயக்குநர் பாண்டுரங்க் தவாரே 60 சுற்றுலா பயணிகளின் குழுவுடன் ரலேகானுக்கு வந்தார். டூர் பேக்கேஜ் குறித்து அறிய நூற்றுக்கணக்கானோர் தினமும் அழைப்பதாக தவாரே கூறுகிறார்.
ரலேகான் சித்தி கிராமம் அன்னா ஹஸாரே ஜுரம் பாதித்தவர்களால் உற்சாகத்தில் மூழ்கியுள்ளதாக ஹஸாரேவின் அந்தரங்க செயலாளர் சுரேஷ் பதாரே தெரிவிக்கிறார். ஆயிரக்கணக்கானோர் இக்கிராமத்திற்கு வருவதாக பதாரே கூறுகிறார்.ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் வேளையில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய யோகா கலைஞர் எனக் கூறப்படும் பாபா ராம்தேவ் ஆவார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்களும் ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இறுதியில் ஹஸாரே சுவாமிஜீகளுக்கு கிடைத்த செல்வாக்கின் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

No comments:

Post a Comment